சென்னை புத்தக திருவிழா என்னும் பெருவிழா – 2022

தமிழகத்தில் நடக்கும் பெரு விழாக்களில் எனக்கு மிகவும் நெருக்கமான,மனதுக்கு பிடித்த நிகழ்ச்சி சென்னை புத்தக திருவிழாதான். ஒரு வாசகனாய் நாம் ஒரு கேள்வியை எதிர் கொண்டிருப்போம், இப்படி புத்தகம் படிப்பதனால் என்ன கிடைக்க போகிறது ? சும்மா இருந்தாலும் இருப்பேன் ஒரு போதும் புத்தகத்தை தொட்டுவிடமாட்டேன் என்று நினைக்கிற முட்டால்கள்தான் இந்த கேள்வியை கேட்பார்கள், அவர்களுக்கு நீங்கள் எந்த விளக்கம் சொன்னாலும் புரியாது. இது போன்றவர்கள் நிரம்பிய உலகில், ஒரு மைதானம் முழுக்க வாசகர்கள்,புத்தக பிரியர்கள்,எழுத்தாளர்களை நிரம்பிய ஒரு கூட்டத்தை பார்க்கும் ஒரு பெரும் பாக்கியத்தை சென்னை புத்தக திருவிழா தந்திருக்கிறது.
ஒரு இடத்தில் மூழ்கி அரிய பல முத்துக்களை எடுப்பது போல இந்த புத்தக திருவிழா. புத்தகம் வாங்குவது கூட இரண்டாம் விசயம் இவ்வளவு பெருமளவில் புத்தகம் நிரம்பிய ஒரு இடத்தை பார்க்கவே அங்கே செல்லவேண்டும். நான் தேடி சென்ற புத்தகங்கள் மட்டும் இல்லாமால் எதிர்பாராத அரிய புத்தகம் கூட கிடைத்தது.படித்துவிட்டு ஒவ்வொரு புத்தகத்தை பற்றியும் எழுதுகிறேன். வாய்ப்பு கிடைக்காத நட்புகள் கவலை கொள்ளாதீர்கள் அடுத்த வருடம் நிச்சயம் நடக்கும் அப்போது போகலாம், வாய்ப்புள்ள தோழர்கள் கண்டிப்பாக சென்று வாருங்கள். எப்போதும் இதே போல சென்னை புத்தக திருவிழா நடக்க வேண்டும். இப்படி ஒரு சிறப்பான பெரு விழாவை நடத்தும் பபாசி மற்றும் அனைவருக்கும் மனசார நன்றிகள்

YouTube: arunsennan
Blog: arunsennan.wordpress.com

Leave a comment