மனித இனம் பல ஆயிரம் வருடமாய் மெல்லமெல்ல சேகரித்த பொக்கிஷங்களை எல்லாம் புத்தகங்களில் தான் பாதுகாத்து வைத்திருக்கிறது
இந்த வரிகளை எங்கோ படித்த நினைவு. இந்த வரிகளை விட புத்தகத்தின் அருமையை எப்படி சொல்வது
புத்தகங்களை விட சிறந்த நண்பனை நான் கண்டதில்லை எப்போதும் என் தனிமையை போக்கும். மாபெரும் அறிஞர்கள், ஆளுமைகள் என்னோடு நீண்ட நெடிய நேரம் புத்தகங்கள் வழியே பேசி இருக்கிறார்கள். நல்ல புத்தகங்களை விட என்னை சந்தோஷப்படுத்தியது வேற எதுவும் இல்லை. சுவாசிக்கும் வரை வாசிப்போம். இந்த வருடம் நான் படித்த நல்ல புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறேன் உங்களுக்கும் உதவலாம்
1.வீடில்லா புத்தகங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
2.கழிவறை இருக்கை – லதா
3.தமிழகத்தில் இஸ்லாம் வந்ததும், வளர்ந்ததும், வாழ்வதும் வரலாறு – முனைவர் ஜெ. ராஜா முகமது
4.புத்தகத்தின் பெருநிலம் – ஆ. சிவசுப்பிரமணியன்
5.மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
6.சோவியத் நாட்டில் – அகிலன்
7.ஆதி இந்தியர்கள் – டோனி ஜோசப்
8.மாபெரும் சபைதனில் – உதயச்சந்திரன்
9.தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை – ஜெ.ஜெயரஞ்சன்
10.விளக்கின் கீழே நிழல் – சகா(சா.கஜேந்திரன்)
11.தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்1 – புலவர் த.கோவேந்தன்
12.பிசினஸ் சீக்ரெட்ஸ் – சி.கே.ரங்கநாதன்
13.The Marwaris by Thomas A Timberg